Sunday, July 3, 2011

இடைசெவல்

பி கே சிவகுமார்

Share

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு கண்டெடுக்கப்பட்டு, கருத்தாக படுக்கைக்கு அருகில் உள்ள புத்தக அடுக்கில் பார்வைக்குப் படும்படி இடம்பெயர்ந்தது. அப்படி என் மனைவி உதவியால், கணினியில் கி.ரா. பற்றிய இவ்வாவணப் படத்தைப் பார்த்தேன். புதுவை இளவேனில் ஆக்கம்.
தமிழில் எழுத்தாளர்களின் ஆவணப் படங்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. (பிற மொழிகளிலும் இதே டெம்ப்ளேட்தானா?) எழுத்தாளர் பிறப்பு, ஊர், குடும்பம், வாழ்க்கை, புகழ்மிக்க படைப்புகள் ஆகியவை, எழுத்தாளர் பேசுவது, எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்பவை, அவர் பெற்ற விருதுகள், அவர் படைப்புகளில் திரைவடிவம் பெற்றவை இன்னபிற என்று ஆவணப்படத்தின் நேரத்துக்கும் நிதிவசதிக்கும் ஏற்ப இப்படங்கள் பெரும்பாலும் இருக்கும். ஜெயகாந்தன் – இரு ஆவணப்படங்கள் (சா. கந்தசாமி, ரவி சுப்ரமணியம் முறையே இயக்கியவை), அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என்று இவ்வரிசையில் நான் பார்த்த படங்களில் கி.ரா.வைப் பற்றிய ஆவணப்படமும். இந்த டெம்ப்ளேட் முறை இல்லாமல் வேறு எப்படிப் படம் எடுப்பது? இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டிய, பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. நான் பார்வையாளன் மட்டுமே. படைப்பூக்கம் இருப்பின், இந்த டெம்ப்ளேட்டையே வேறு மாதிரியான கதை சொல்லலில் புதுவடிவமாக மாற்றக் கூடிய சாத்தியக்கூறும் இருக்கிறது.

இத்தகைய ஆவணப்படங்கள் – இயக்குநரிடம் எழுத்தாளரும் அவர் படைப்பும் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுபவை. எழுத்தாளரைப் பற்றிய படம் என்றாலும், அது இயக்குநரின் பார்வையிலேயே கிடைக்கிறது. எழுத்தாளர் பார்வையாளரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் வேறானதாக இருந்தால் பார்வையாளர் ஏமாந்து போகிறார். அதனாலேயெ எனக்குத் தெரிந்து பலருக்கும் அவர்களின் ஆதர்ச எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் குறித்த திருப்தி ஏற்படவில்லை. நாவல்கள் (அல்லது பிரபல படைப்புகள்) திரைவடிவம் கொள்ளும்போது, அதைப் படைப்பாகக் கொண்டாடிய வாசர்களிடம் எடுபடாமல் போவதற்கான காரணமும் இதுவே. ஒரு படைப்பும் படைப்பாளனும் வாசகனின் உள்மனதில் பல்வேறு காட்சிப் படிமங்களை உருவாக்கி வைத்துள்ளன(ர்). திரைவடிவம் அதற்கு ஈடு செய்ய இயலாமல் போகும்போது ஏமாற்றம் உருவாகிறது.

கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர் வேலையை அவரே பார்ப்பார் என்று சொல்வார்கள். அப்படி எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய ஆவணப்படம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் பங்கெடுக்காவிட்டால், இயக்குநருக்கு எழுத்தாளர் குறித்து இருக்கும் சித்திரமே நமக்கும் பார்க்கக் கிடைக்கும். ஆனால், நல்ல கலைஞர்கள் தங்களைப் பற்றி எடுக்கப்படும் படங்களில் பெரிதும் தலையிட மாட்டார்கள். ஜெயகாந்தனைப் பற்றி சா. கந்தசாமி எடுத்த படத்தில் ஜெயகாந்தன் தலையிடவே இல்லை எனக் கேள்விப்பட்டேன். ஓர் இயக்குநராக சா. கந்தசாமி ஜெயகாந்தனைப் பற்றித் தான் விரும்பியதை அப்படத்தில் காட்டினார். அப்படம் பலருக்கும் மாபெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. மாறாக, ஜெயகாந்தனைப் பற்றிய ரவி சுப்ரமணியத்தின் படம் (அதன் ஓடும் நேரமும் அதிகம்) பலருக்கும் பிடிக்கக் காரணம், அதில் ஜெயகாந்தனின் பல பரிமாணங்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் ஓரளவுக்குப் பிறர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வந்திருந்ததுதான். இப்படம் எடுக்கப்பட்ட விதத்திலும் ஜெயகாந்தன் தலையிடவில்லை. ஆனால் ஜெயகாந்தன் குறித்த எச்சித்திரத்தைக் காட்ட வேண்டும் என்ற பிரக்ஞை இயக்குநருக்கு இருந்தது.

எழுத்தாளரைப் பற்றிய படத்தில் எழுத்தாளர் எதற்கு என்று என் நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். எழுத்தாளர் பற்றிய படத்தில் எழுத்தாளர் இல்லாவிட்டால் வாசகனான நான் அதை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்வதை நான் எழுத்து வழியாகவோ, வேறு வழிகளிலோ அறிந்து கொள்ள இயலும். அதற்கு ஆவணப்படம் தேவையில்லை. அல்லது அப்படி எடுக்கப்படுகிற படங்கள் ஒரு வாழ்க்கை வரலாறாகவோ, விமர்சனப் பார்வையாகவோதான் இருக்கும். தவிர ஓர் எழுத்தாளர் அவரைப் பற்றிய ஆவணப் படத்தில் இடம்பெறும்போது, நானறியாத அவ்வெழுத்தாளரின் சில ஆளுமைகளை, தனிப்பட்ட விஷயங்களை (குடும்பம் இத்யாதி), அறிந்து கொள்ள இயலும் என்ற காரணமே எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் மீது என் ஆர்வத்தை உருவாக்குகிறது.

பதின்ம வயதில், என் அறியாமையால், வட்டார வழக்கு எழுத்துகளின் மீது எனக்கு அதிக ஆர்வமும் மதிப்பும் இல்லாமல் இருந்தது. முக்கியக் காரணம், வட்டார வழக்கில் பல சொற்களுக்குப் பொருள் தெரியாமல் படிக்கும்போது பற்களில் கல்லாக இடறும். மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் போய்விடும். கோயமுத்தூரில் கல்லூரிப் படிப்புக்குச் சென்று, கொங்கு தமிழின் அழகில் மயங்கிய பின்னரே, வட்டார வழக்குகளின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தைத் தொடரக் காரணமாக இருந்தவை கி.ரா.வின் எழுத்துகள். அவர் எழுத்தில் மின்னலிடும் நகைச்சுவையும், எளிமையும், மனிதநேயமும் அவர்பால் மரியாதை உண்டாக்கின. ஆனால், இப்படத்தில் கி.ரா.வின் எழுத்துகளில் மின்னலிடும் நகைச்சுவையை அவர் பேச்சுகளில் காண இயலவில்லை. ஜெயகாந்தன் எழுத்துகள் மிகவும் சீரியஸானவை. ஆனால், அவர் நேர்ப்பேச்சுகளில் ஒரு தன்னியல்பான (spantaneous) நகைச்சுவை இழைந்தோடிக் கொண்டே இருக்கும். அந்த நகைச்சுவை ஜெயகாந்தன் எழுத்தில் ஏன் வராமலேயே போனது என கோபால் ராஜாராமும் நானும் பேசியிருக்கிறோம். அப்படி, கி.ரா. எழுத்துகளில் காண்கிற நகைச்சுவை இப்படத்தில் அவர் பேசுகையில் காணக் கிடைக்கவில்லை. கி.ரா. தனிப்பேச்சுகளில் நகைச்சுவை கலக்கமாட்டாரா? அல்லது இயக்குநர் அதைப் படத்தில் கொண்டு வரவில்லையா?

கி.ரா.வை ஓர் எழுத்தாளர் என்ற அளவிலேயே அவர் எழுத்துகளின் மூலம் அறிவேன். அவர் தனிவாழ்க்கை பற்றிய தகவல்கள் என்னிடம் அதிகம் இல்லை. அக்குறையைப் போக்கியது இப்படம். கி.ரா. என்னும் மனிதரின் வாழ்க்கையை பெரும்பாலும் அவரே சொல்லிக் கேட்கும் அனுபவத்தை இப்படம் தந்தது. சில வருடங்களாக, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் ஓர் இடைவெளி தேவை என்னும் கருத்து என் மனதில் வலுவாகி வருகிறது. அப்படி ஓர் எழுத்தாளரை அவர் எழுத்துக்கும் அப்பால் தொலைவில் நின்றபடியே அறிய விரும்புகிறவர்களுக்கு எழுத்தாளர் இடம்பெறும் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் பெருஉதவி புரியும். அவ்விதத்தில் கி.ரா.வை அருகில் இருந்து சிலமணி நேரங்கள் பார்த்த அனுபவத்தை இப்படம் தந்தது.

http://puthu.thinnai.com/?p=887

இடைசெவல்

பி கே சிவகுமார்

Share

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு கண்டெடுக்கப்பட்டு, கருத்தாக படுக்கைக்கு அருகில் உள்ள புத்தக அடுக்கில் பார்வைக்குப் படும்படி இடம்பெயர்ந்தது. அப்படி என் மனைவி உதவியால், கணினியில் கி.ரா. பற்றிய இவ்வாவணப் படத்தைப் பார்த்தேன். புதுவை இளவேனில் ஆக்கம்.
தமிழில் எழுத்தாளர்களின் ஆவணப் படங்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. (பிற மொழிகளிலும் இதே டெம்ப்ளேட்தானா?) எழுத்தாளர் பிறப்பு, ஊர், குடும்பம், வாழ்க்கை, புகழ்மிக்க படைப்புகள் ஆகியவை, எழுத்தாளர் பேசுவது, எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்பவை, அவர் பெற்ற விருதுகள், அவர் படைப்புகளில் திரைவடிவம் பெற்றவை இன்னபிற என்று ஆவணப்படத்தின் நேரத்துக்கும் நிதிவசதிக்கும் ஏற்ப இப்படங்கள் பெரும்பாலும் இருக்கும். ஜெயகாந்தன் – இரு ஆவணப்படங்கள் (சா. கந்தசாமி, ரவி சுப்ரமணியம் முறையே இயக்கியவை), அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என்று இவ்வரிசையில் நான் பார்த்த படங்களில் கி.ரா.வைப் பற்றிய ஆவணப்படமும். இந்த டெம்ப்ளேட் முறை இல்லாமல் வேறு எப்படிப் படம் எடுப்பது? இயக்குநர்கள் கவனம் செலுத்த வேண்டிய, பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. நான் பார்வையாளன் மட்டுமே. படைப்பூக்கம் இருப்பின், இந்த டெம்ப்ளேட்டையே வேறு மாதிரியான கதை சொல்லலில் புதுவடிவமாக மாற்றக் கூடிய சாத்தியக்கூறும் இருக்கிறது.

இத்தகைய ஆவணப்படங்கள் – இயக்குநரிடம் எழுத்தாளரும் அவர் படைப்பும் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்படுபவை. எழுத்தாளரைப் பற்றிய படம் என்றாலும், அது இயக்குநரின் பார்வையிலேயே கிடைக்கிறது. எழுத்தாளர் பார்வையாளரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் வேறானதாக இருந்தால் பார்வையாளர் ஏமாந்து போகிறார். அதனாலேயெ எனக்குத் தெரிந்து பலருக்கும் அவர்களின் ஆதர்ச எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் குறித்த திருப்தி ஏற்படவில்லை. நாவல்கள் (அல்லது பிரபல படைப்புகள்) திரைவடிவம் கொள்ளும்போது, அதைப் படைப்பாகக் கொண்டாடிய வாசர்களிடம் எடுபடாமல் போவதற்கான காரணமும் இதுவே. ஒரு படைப்பும் படைப்பாளனும் வாசகனின் உள்மனதில் பல்வேறு காட்சிப் படிமங்களை உருவாக்கி வைத்துள்ளன(ர்). திரைவடிவம் அதற்கு ஈடு செய்ய இயலாமல் போகும்போது ஏமாற்றம் உருவாகிறது.

கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட இயக்குநர் வேலையை அவரே பார்ப்பார் என்று சொல்வார்கள். அப்படி எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய ஆவணப்படம் எப்படி இருக்க வேண்டுமென்பதில் பங்கெடுக்காவிட்டால், இயக்குநருக்கு எழுத்தாளர் குறித்து இருக்கும் சித்திரமே நமக்கும் பார்க்கக் கிடைக்கும். ஆனால், நல்ல கலைஞர்கள் தங்களைப் பற்றி எடுக்கப்படும் படங்களில் பெரிதும் தலையிட மாட்டார்கள். ஜெயகாந்தனைப் பற்றி சா. கந்தசாமி எடுத்த படத்தில் ஜெயகாந்தன் தலையிடவே இல்லை எனக் கேள்விப்பட்டேன். ஓர் இயக்குநராக சா. கந்தசாமி ஜெயகாந்தனைப் பற்றித் தான் விரும்பியதை அப்படத்தில் காட்டினார். அப்படம் பலருக்கும் மாபெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. மாறாக, ஜெயகாந்தனைப் பற்றிய ரவி சுப்ரமணியத்தின் படம் (அதன் ஓடும் நேரமும் அதிகம்) பலருக்கும் பிடிக்கக் காரணம், அதில் ஜெயகாந்தனின் பல பரிமாணங்கள், தனிப்பட்ட குணாதிசயங்கள் ஓரளவுக்குப் பிறர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வந்திருந்ததுதான். இப்படம் எடுக்கப்பட்ட விதத்திலும் ஜெயகாந்தன் தலையிடவில்லை. ஆனால் ஜெயகாந்தன் குறித்த எச்சித்திரத்தைக் காட்ட வேண்டும் என்ற பிரக்ஞை இயக்குநருக்கு இருந்தது.

எழுத்தாளரைப் பற்றிய படத்தில் எழுத்தாளர் எதற்கு என்று என் நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். எழுத்தாளர் பற்றிய படத்தில் எழுத்தாளர் இல்லாவிட்டால் வாசகனான நான் அதை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். எழுத்தாளரைப் பற்றிப் பிறர் சொல்வதை நான் எழுத்து வழியாகவோ, வேறு வழிகளிலோ அறிந்து கொள்ள இயலும். அதற்கு ஆவணப்படம் தேவையில்லை. அல்லது அப்படி எடுக்கப்படுகிற படங்கள் ஒரு வாழ்க்கை வரலாறாகவோ, விமர்சனப் பார்வையாகவோதான் இருக்கும். தவிர ஓர் எழுத்தாளர் அவரைப் பற்றிய ஆவணப் படத்தில் இடம்பெறும்போது, நானறியாத அவ்வெழுத்தாளரின் சில ஆளுமைகளை, தனிப்பட்ட விஷயங்களை (குடும்பம் இத்யாதி), அறிந்து கொள்ள இயலும் என்ற காரணமே எழுத்தாளர் பற்றிய ஆவணப்படங்கள் மீது என் ஆர்வத்தை உருவாக்குகிறது.

பதின்ம வயதில், என் அறியாமையால், வட்டார வழக்கு எழுத்துகளின் மீது எனக்கு அதிக ஆர்வமும் மதிப்பும் இல்லாமல் இருந்தது. முக்கியக் காரணம், வட்டார வழக்கில் பல சொற்களுக்குப் பொருள் தெரியாமல் படிக்கும்போது பற்களில் கல்லாக இடறும். மேற்கொண்டு படிக்கும் ஆர்வம் போய்விடும். கோயமுத்தூரில் கல்லூரிப் படிப்புக்குச் சென்று, கொங்கு தமிழின் அழகில் மயங்கிய பின்னரே, வட்டார வழக்குகளின் மீது எனக்கு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தைத் தொடரக் காரணமாக இருந்தவை கி.ரா.வின் எழுத்துகள். அவர் எழுத்தில் மின்னலிடும் நகைச்சுவையும், எளிமையும், மனிதநேயமும் அவர்பால் மரியாதை உண்டாக்கின. ஆனால், இப்படத்தில் கி.ரா.வின் எழுத்துகளில் மின்னலிடும் நகைச்சுவையை அவர் பேச்சுகளில் காண இயலவில்லை. ஜெயகாந்தன் எழுத்துகள் மிகவும் சீரியஸானவை. ஆனால், அவர் நேர்ப்பேச்சுகளில் ஒரு தன்னியல்பான (spantaneous) நகைச்சுவை இழைந்தோடிக் கொண்டே இருக்கும். அந்த நகைச்சுவை ஜெயகாந்தன் எழுத்தில் ஏன் வராமலேயே போனது என கோபால் ராஜாராமும் நானும் பேசியிருக்கிறோம். அப்படி, கி.ரா. எழுத்துகளில் காண்கிற நகைச்சுவை இப்படத்தில் அவர் பேசுகையில் காணக் கிடைக்கவில்லை. கி.ரா. தனிப்பேச்சுகளில் நகைச்சுவை கலக்கமாட்டாரா? அல்லது இயக்குநர் அதைப் படத்தில் கொண்டு வரவில்லையா?

கி.ரா.வை ஓர் எழுத்தாளர் என்ற அளவிலேயே அவர் எழுத்துகளின் மூலம் அறிவேன். அவர் தனிவாழ்க்கை பற்றிய தகவல்கள் என்னிடம் அதிகம் இல்லை. அக்குறையைப் போக்கியது இப்படம். கி.ரா. என்னும் மனிதரின் வாழ்க்கையை பெரும்பாலும் அவரே சொல்லிக் கேட்கும் அனுபவத்தை இப்படம் தந்தது. சில வருடங்களாக, எழுத்தாளருக்கும் வாசகருக்கும் ஓர் இடைவெளி தேவை என்னும் கருத்து என் மனதில் வலுவாகி வருகிறது. அப்படி ஓர் எழுத்தாளரை அவர் எழுத்துக்கும் அப்பால் தொலைவில் நின்றபடியே அறிய விரும்புகிறவர்களுக்கு எழுத்தாளர் இடம்பெறும் எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்கள் பெருஉதவி புரியும். அவ்விதத்தில் கி.ரா.வை அருகில் இருந்து சிலமணி நேரங்கள் பார்த்த அனுபவத்தை இப்படம் தந்தது.


Sunday, June 27, 2010

உங்களைப் பாராட்டினால் அதற்கும் திட்டுவீர்களா? உங்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது சாரு…

நிரஞ்சனா,

பெங்களூரு.

நீங்கள் இந்த எழுத்துலகுக்குப் புதியவர் என்பதால் இந்தச் சூழல் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புதுப்பேட்டை சினிமாவை எதற்கு உதாரணம் காட்டினேன்? அந்த அளவுக்கு பயங்கரமானது எழுத்து உலகம். புதுவை இளவேனில் என்னைப் போன்றவர். அவர் மனதில் உள்ளதைத்தான் சொல்லியிருப்பார். ஆனால் ரவிக்குமார்? கருணாநிதியின் கவிதைகளை பாரதியின் கவிதைகளோடு ஒப்பிட்டவர் ஆயிற்றே? மனுஷ்ய புத்திரன் மட்டும் சும்மாவா? கமல்ஹாசனைப் பாராட்டுகிறார். விஜய் மகேந்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்கும் ஒரே மாதிரி ப்ளர்ப் எழுதுகிறார். அதனால் யார் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்றே புரிய மாட்டேன் என்கிறது.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அவுட்லுக் பத்திரிகையில் செம்மொழி மாநாடு பற்றிய மனுஷ்ய புத்திரனின் பேட்டியைப் பாருங்கள். அந்தக் காலத்தில் ரொம்பப் பூடகமாக படிமக் கவிதை எழுதுவார்கள். அந்த ஸ்டைலில் பேட்டி கொடுத்திருக்கிறார். கருணாநிதியைத் திட்டுகிறாரா, பாராட்டுகிறாரா? ஒரு மண்ணும் புரியவில்லை. அப்படி ஒரு பேட்டி.

அதிலும் நான் கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மனுஷ்ய புத்திரன் என்னிடம் அவ்வளவாகப் பேசுவதில்லை. சில தினங்களுக்கு முன்பு நீண்ட கவிதை ஒன்றை அனுப்பி வைத்தேன். பிரசுரிக்கக் கூட வேண்டாம்; எப்படி வந்திருக்கிறது என்று சொன்னால் போதும் என்றேன். அதோடு காணாமல் போனவர் தான்; எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதனால் ரவிக்குமார், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பாராட்டு எனக்குள் ஒரு கிலியை ஏற்படுத்துகிறது. தூக்கம் கூட வரவில்லை. அதனால் இன்று மூன்று மணிக்கே எழுந்து விட்டேன்.

25.6.2010.

Thursday, June 24, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று ஒரு குறள் தொடங்குகிறது அல்லவா? அந்தக் குறள் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றும் ஒருவரை அண்மையில் கண்டேன். அவர் பெயர் ரவிக்குமார் எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ. என்பது பெயரின் இனிஷியல் அல்ல; அது அவர் வகிக்கும் பதவி. அவரைப் பற்றி அவ்வப்போது என் பத்தியில் விமர்சித்து எழுதுவது என் வழக்கம்.

அப்படிச் செய்தால் பொதுவாக மற்றவர்கள் பகைமைதானே பாராட்டுவார்கள்? ஆனால் ரவிக்குமார் திருவள்ளுவரின் வாக்குப்படி வாழ்பவர் ஆயிற்றே? சமீபத்தில் என்னிடம் பேசிய அவர் புதுவை இளவேனில் சொன்னதாக ஒரு தகவல் சொன்னார். என்ன அது? என் கவிதைகள் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விட நன்றாக இருக்கிறது என்று புதுவை இளவேனில் சொன்னாராம். அதைக் கேட்டதும் எனக்கு ஒருக்கணம் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இளவேனிலிடம் ரவிக்குமார் “இதை வெளியே எங்கேயும் சொல்லி விடாதீர்கள்; அப்புறம் உயிரோடு நடமாட முடியாது…” என்று சொல்லியிருக்கிறார்:

அதிர்ச்சியில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த என்னிடம் ரவிக்குமார் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். ”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்; ஆனால் வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்தாயிற்றே?”

நான் ஆமாம் ஆமாம் என்று சொல்லி விட்டுப் பேச்சை மாற்றினேன்.

ரவிக்குமார் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்குப் புரியவில்லை. அமைதிப்படை, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்கள் மனதில் நிழலாடின. என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று புரியவில்லையே? தனுஷின் அப்பாவை உயிரோடு புதைக்கிறார்கள் தனுஷின் அடியாட்கள். அந்த சவக்குழியைத் தோண்டியதே தனுஷின் அப்பாதான். டேய் வுட்ருங்கடா, வுட்ருங்கடா என்று அந்த அடியாட்களிடம் கெஞ்சுகிறார் அப்பா. அப்போது அந்த அடியாட்களில் ஒருவன் சொல்கிறான். வுட்ருவோம் பெருசு… ஆனா உம் பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இந்தக் குழிய நோண்டில்ல பார்ப்பான்? என்ன செய்யுறது?” என்று கேட்டு விட்டு தனுஷின் அப்பா மீது மண்ணை அள்ளிப் போட்டுப் புதைப்பார்கள்.

மன்னியுங்கள். இந்தக் காட்சி ஏன் அப்போது எனக்கு ஞாபகம் வந்தது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. ஏதாவது மனக்குறளியாகத்தான் இருக்க வேண்டும். நித்தியானந்தனிடம் பட்ட அடியால் என் மூளையே பிசகிப் போயிருக்கிறதோ என்னவோ?

சரி விடுங்கள். இந்தச் சம்பவத்தை – அதாவது, ரவிக்குமார் எம்.எல்.ஏ. என் கவிதைகள் பற்றிச் சொன்னதை ஒருநாள் மனுஷ்ய புத்திரனிடமே சொன்னேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சாரு…”

Friday, May 21, 2010

தங்களது கரிசல் காட்டு ஞாபகங்கள் எப்படி இருக்கிறது?
முதலில் இருந்த தீவிரம், ஈடுபாடு அதெல்லாம் குறைந்திருக்கிறது. அதற்காக இல்லையென்று என்று அர்த்தம் இல்லை. அந்த நினைவுகள் இருக்கிறது. ஆனால் சற்று குறைந்திருக்கிறது.

‘கதை சொல்லல்’ எனும் கலை உங்களுக்குள் ஒரு விதையாக விழுந்த காரணம்?
அது ஒவ்வொரு மனுஷங்களுக்குள்ளேயும் இருக்கு. எனக்குள்ளயும் இருக்கு. உங்களுக்குள்ளயும் இருக்கு. ஆனால் வடிவங்கள் வித்தியாசமா இருக்கும். இப்ப வந்து நீங்க ஒரு ஊருக்குப் போயிட்டு வர்றீங்க. நீங்க பார்த்தத, கேட்டத, அங்க உள்ள சுவாரசியங்கள யார்கிட்டயாவது சொல்றீங்க இல்லையா. அது கதைதான். ஆனா கதை வடிவம் உண்டா அப்டினு கேக்கக்கூடாது. இப்ப ஒரு கதை விடுறதுனு சொல்வாங்க. அந்த மாதிரி கதை உண்டாகுறதுக்கு, கதையா வடிவமாறதுக்கு முன்னால ஒரு நிலை எதுனா கேட்டா அது சம்பவங்கள் தான். சம்பவங்கள்தான் பின்னால கதையாகுது. ஒரு விஷயம் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு நாக்குக்கு நாக்குக் கடந்து போயிட்டே இருந்தா அது கதையாகிக்கிட்டே போகும். கதையானதுக்கு அப்புறமும் கூட நீங்க வந்து அந்த கதையை திரும்பவும் சொல்லும் போது வித்தியாசப்படும். அது இன்னொரு இடம், இன்னொரு இடம்னு போகும் போது வித்தியாசப்படும். ஆகவே வடிவங்கள் வித்தியாசப்பட்டுக்கிட்டே போகும். எனவே, க்தை அப்டிங்றது நீங்க நினைக்கிற மாதிரி ஏதோ ஒரு வடிவத்துல கதைதான்னு நினைக்கப்படாது. அது எல்லா இடத்துலயும் நீக்க மற இருக்கு. அது வந்து நாட்டுப் புறத்துலதான் இந்த கதை இருக்கு. நகர்ப்புறத்துல இல்லை அப்டினு சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லாரிடத்திலும் இந்த கதை சொல்லலும், கதை கேட்டலும் இருந்துக்கிட்டேதான் இருக்கு.

கி.ரா.வுடைய எழுத்துக்கான அடையாளம் பற்றி..
ஒரு மனிதனிடமிருந்து ஒரு விஷயம் கதையாகவோ, சம்பவமாகவோ, நடப்பை சொல்வதாகவோ கிளம்புகிறது. அது எப்படி உள்ள வருதுனா முதலில் கி.ரா. நினைக்கிறார். அதுவே வெளியே வருதுனா நூத்துக்கு நூறு அப்டியே வெளியே வருதுனு சொல்ல முடியாது. சொல்லும் போதே திசை மாறும். வடிவம் மாறும் ஆகவே எப்படி சொல்கிறார் என்ன, ஏதுங்றது அந்த வினாடிதான் சொல்லும் போது நிர்ணயமாகும். எழுதும் போது நிர்ணயமாகும். இப்ப நான் வந்து ஒரு கதையில எழுதுறேன்னு வச்சுக்கங்க. முதல்ல நான் ஒரு கதை எழுதி முடிப்பேன். அல்லது ஒரு கட்டுரை எழுதி முடிப்பேன். அதன் நகல் பண்ணும் போது மாறிட்டே வரும். அசல் வராது. இது என் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனா ஒவ்வொருத்தருக்கும் வேறுபடலாம். ஆகவே அது எப்டி வருது அப்டிங்றது வினாடிய பொறுத்த விஷயம்தான்.

1958 ல சரஸ்வதியில எழுத ஆரம்பிச்ச நீங்க இன்னைக்கும் வரைக்கும் வெவ்வேறு பரிமாணங்கள்ல வாசகர்களோட நேரடித் தொடர்புல இருக்கீங்க. ஒரு வாசகனுடன் இவ்வளவு வருடங்கள் தொடர்பிலிருக்கும் நீங்கள் அவர்களுடைய எண்ணங்கள், அவதானிப்புகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்கிறீர்கள்?
மாறுபடுவதுங்றது இயல்பு. 57&58ல இருந்த மாதிரி இப்ப 2009ல இருக்க முடியாது. மனிதனுடைய வளர்ச்சியிலயும் மாறுதல், காலம் மாறுதல், உடல் மாறுதல், மனசு மாறுதல், சூழல் மாறுதல் இதெல்லாம் கொண்டுதான் விஷயங்கள் இருக்கும்.

படைப்பின் வடிவம் வேறுபடும் போது அது ஒருவருடைய தனித்துவம் என வைத்துக் கொள்ளலாமா?
ஆமா.. ஆதிமூலத்தைப் போல கோட்டோவியங்கள யாராலும் வரைய முடியாது. எல்லாரும் கோடு போடுறவங்கதான். கோட்டோவியக்காரர்கள்தான் ஆனா அவரை அடிச்சுக்க ஆளே இல்ல. எது செய்தாலும் அப்டி செய்வாரு. எம்.எஸ்க்கு ஒரு குரல், லதா மங்கேஷ்கருக்கு ஒரு குரல்னு இருக்குதானே. அது மாதிரி. இதுக்கு அவர்தான் ஆதி, அவர்தான் மூலம். அவருகிட்ட குழந்தைகள பத்தி எழுதக் கூடிய எழுத்தாளர்கள் குழந்தைகளா இருந்திருப்பாங்க இல்லையா? அவங்களோட வாழ்க்கைய கோட்டோவியங்களாக செய்யலாமேன்னு கேட்டேன். ரஷ்யா எழுத்தாளர்கள்லாம் எழுதியிருக்காங்க. தமிழ்ல யாரும் எழுதல. நீங்க சொன்ன பல விஷயங்களை ஆல்பமா பண்ணுங்கன்னேன். நல்ல யோசனைதான். ஆனா ‘நான் அந்த கோட்ட விட்டுட்டேன். அதை நிறுத்திட்டு கலருக்கு வந்துட்டேன். அதனால அத இனிமே செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டார்.

ஒரு படைப்பாளி தனது நிலையில் புதிய பரிணாமத்தை எட்டும் போது பழையதை விட்டுவிடுவார்களா?
நிச்சயமா.. ப்ரெஞ்ச்ல மஞ்சள் இருந்து பச்சைக்கு போனோன். பச்சைல இருந்து நீலத்துக்குப் போயிட்டாங்க அப்டினு சொல்வாங்க. அது மாதிரிதான்.

இது ஓவியங்களுக்கு மட்டும்தானா? எழுத்துக்கும் உண்டா? கவிதை, கதை, சார்ந்த படைப்புகளுக்கும் உண்டா?
இல்லை. கதையின் வடிவம் மாறுமே. அப்ப இருந்த சிறுகதையின் வடிவம் இப்ப கிடையாது. நாவலின் பழைய வடிவமும் கிடையாது. கவிதையின் பழைய வடிவமும் இப்ப கிடையாதுன்னு ஆகிப் போச்சே.

இடைச்சேவலில் விவசாயியாக இருந்ததுக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்துல பேராசிரியராக இருந்ததுக்குமான மாற்றங்களை எப்படி உணர்கிறீர்கள்?
முதலில் பல்கலைக்கழகத்தில் அழைப்பு வந்ததும் பயம் தான் வந்தது. என்னைப் பல்கலைக்கழகம் எப்படி கூப்பிட்டதுனா நாட்டுப்புறவியல் ஒன்னு தொடங்கனும்னு சொன்னாங்க. நாட்டுப்புறவியல் பத்தி ஓரளவு தெரிஞ்சவர்னு நினைச்சாங்க. எனக்கு தயக்கம் என்னன்னா நான் பொறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமம். திடீர்னு பல்கலைக்கழகத்துல கூப்பிட்டதும் உடனே பதில் எழுதல. பொதுவா எனக்கு வரமுடியாதுனு காரணம் சொல்றதுக்காக எனக்கு உடல் நிலை சரியில்லைனு துணைவேந்தர்கிட்ட சொன்னேன். வயசாகிட்டுதுனு சொன்னேன். 66 வயசுல கூப்பிட்டாங்க. இப்ப 86 வயசாகுது. உடம்புக்கு என்ன செய்துனு கேட்டாரு. எனக்கு பி.பி. இருக்கு, டயாபிட்டீஸ் இருக்கு, சுகர் இருக்கு, அது, இதுனு சொன்னேன். அவரும் இதெல்லாம் எனக்கும் இருக்கு. ஆகவே நீங்க வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நோய்களை எதிர்ப்போம்னு சொன்னாரு. கல்லூரினாலே மாணவர்கள் பேராசிரியர்கள கிண்டல், கலாட்டா பண்றதுனு கல்லூரி நான் போகலைன்னாலும் நான் கேள்விப்பட்ட விஷயம் அப்டி. பல்கலைக்கழகத்துல சாஸ்தியா இருக்கும். நாம எப்படி குப்பைக் கொட்டுறது? அவர் சொல்றாரு உனக்கு பேராசியர் சம்பளம் கொடுப்போம்னு, ஆனா எனக்கு முன்னால க.நாசு. கெஸ்ட் லெக்சரரா இருந்தாரு. என்னை பேராசிரியராவேக் கூப்பிடுறாங்க. ‘நாட்டுப்புறவியல் தொடங்குறோம் அதுக்கு நீதான் பொறுத்தம்னு எங்களுக்கு தெரியுது. நீங்க அவசியம் வந்து இந்த வேலைல பொறுப்பேத்துக்கணும்‘னு சொல்றாங்க. எனக்கு பயம் வந்துடுச்சு. அப்ப சொந்தக்காரன் ஒருத்தன் ‘நீங்க ஒரு ரிசைன் லட்டர் எழுதி பாக்கெட்டுல வச்சுக்கங்க. பிடிக்கலைனா தேதி போட்டு கொடுத்துட்டு வந்துடுங்க. இதுக்கு ஏன் யோசிக்கிறீங்க’னு சொன்னான். இப்டி ஒரு வருஷம் ஓடிப் போச்சு. அப்புறம்தான் நான் இங்க வந்தேன். வந்து பாத்த பிறகுதான் தெரிஞ்சது. எம்.ஏ., எம்.ஃபில், பி.ஹெச்டி மாணவர்கள் எல்லாரும் இருக்குறதுதான் பல்கலைக்கழகம்னு. அப்பதான் துணை வேந்தர் ‘நீங்க பயப்படுற அளவுக்கு ஒண்ணும் கிடையாது. கல்லூரிலதான் கல்வி மற்ற விஷயங்கள் எல்லாம். இங்க எல்லாரும் ஆய்வு மாணவர்கள்தான்‘னு சொன்னாங்க. என்னைய வகுப்பெடுக்கச் சொல்லும் போதுதான் ‘அது என்னால முடியாது’னு சொன்னேன். ‘ நீங்க அவங்க பாடத்த வகுப்பெடுக்குறதுல அர்த்தம் இல்லை. வகுப்புங்றது ஒரு முக்கால் மணி நேரம். மாணவர்களோட பேசிட்டிருந்தா போதும்‘னு சொல்லவும் எதைப் பத்தி பேசனு கேட்டேன். உலகத்தப் பத்தி, கிராமத்தப் பத்தி, கதைகளப் பத்தி, சினிமாவப் பத்தி, அரசியல் பத்தி எதைப் பத்தியும் பேசலாம். தோணுனா கதைகள சொல்லுனு சொன்னாரு. அவர் சொல்றார் ‘ஒரு எளிய அனுபவம் உள்ள ஒரு வயசாலிய மாணவர்கள்கிட்ட பேச வைக்கிறது கிடையவே கிடையாது. மாணவர்கள் தன்னோட 25 வருடங்களப் படிப்புல செலவிடுறத வேடிக்கையா கிருபானந்தவாரியர் ‘காலேஜ்னா ‘கால் ஏஜ்’ எந்த விதமான அனுபவமும் மாணவர்களுக்கும் பயனில்லாம, படிப்புக்கும் பயனில்லாம போகுது’னு சொல்வாராம். அப்டி பயன்படாம இருக்குறவங்களுக்கு உன்னுடைய அனுபவங்கள் நீங்க பேசும் போது பயன் தரும்னு சொன்னாரு. இது வந்து ஒரு சுதந்திரமான பல்கலைக்கழகம். அதனால அந்த துணை வேந்தர் என்ன நினைக்கிறாரோ அதை செய்யலாம். அப்ப அவர்கிட்ட சில கேள்விகளை பொதுக் கூட்டத்துல வச்சு ‘இவர் என்ன டாக்டரேட் பண்ணாரா? எப்டி இவரை பேராசிரியரா நியமிச்சீங்க’ அப்டினு கேட்டாங்க. அதுக்கு அவர் ‘கம்பரையும், திருவள்ளுவரையும் நான் பேராசிரியா நியமிச்சிருக்கேன்னு வச்சுக்கங்க. அவங்க எங்க டாக்டரேட் பண்ணினாங்கன்னு கேட்க முடியுமா? அவங்கள வச்சு எத்தனை பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. அது மாதிரிதான் கி.ராவும். அவர் படைப்புகள பத்தி எத்தனையோ பேர் டாக்டரேட் பண்ணியிருக்காங்க. இவர் எதுக்கு டாக்டரேட் படிக்கணும்‘னு சொன்னாரு. இரண்டு காரியங்கள் பண்ணினோம். ஒன்று புத்தகம் எழுதுவது. இன்னொன்று ஏதாவது திட்டத்தை ஆய்வு செய்வது. முதலில் ஆய்வுக்கு முன்னால இந்த மண்ணுல இருக்குற நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி ஒரு புத்தகம் கொண்டு வந்தோம். அப்புறம் ரெண்ணு செமினாரு நடத்துனோம். அதனால விவசாயிக்கும் பேராசிரியருக்கும் சம்பந்தமில்ல.

பல்கலைக்கழகத்துல வித்தியாசமான அனுபவம் உண்டா?
பல்கலைக் கழகத்து ஆய்வ எடுத்துப் படிச்சுப் பாத்தேன். அதுல ஒண்ணுமே இல்லை. எதையுமே கண்டுபிடிக்காம வெறும் புள்ளி விவரங்களா சொல்றதுக்கு எதுக்கு டாக்டரேட் கொடுக்கனும்? அதுலயும் கூறியது கூறல் குற்றம்னு சொல்வாங்க. முதல் அத்தியாயத்தில சொன்னதையே இரண்டாவது அத்தியாயத்துல சொல்றதுனு ரொம்ப கேவலமா இருந்தது. எனக்கு பெரிய அதிர்ச்சிய இருந்தது. அப்புறம் நான் துறைத்தலைவர்கிட்ட ‘என்னங்க இதுனு‘ கேட்டேன். ‘அதெல்லாம் அப்டித்தான்’னாரு.

உங்களுடைய பார்வையில் கல்வி என்பது என்ன?
கல்வி என்பது ஞானத்தை அடைவது, தேடுவது. இது இல்லைனா அது கல்வி கிடையாது. அது வேலைக்கான தயாரிப்புகளே.

உங்க அறையிலிருக்கும் மிகப் பெரிய மரத்தாலான எழுதுகோல் பற்றி..
அது என்னோட 70வது பிறந்த நாளில் நடிகர் பார்த்திபன் கொடுத்தது. அவர் எதையும் வித்தியாசமா செய்யக்கூடியவர். அதான் இந்த வித்தியாசமான பேனா.

உங்களுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞர் இளவேனில் பத்தி சொல்லுங்களேன்.
மத்தவங்க படம் எடுத்தா ஒரு முகம் தான் வந்துட்டே இருக்கும். இவர் அப்டி இல்லை. கி.ராவுடைய பல முகங்களைக் கொண்டு வருவாரு. ஒரு படம் செய்தி சொல்லனும்னு விரும்புவாரு. படம்ங்றது இயக்கமா இருக்கனும்னு நினைக்கிறவரு.

ஒரு படைப்பாளிக்கான அங்கீகாரமா எதை நினைக்கிறீங்க.
சில பேர் நினைத்துக் கொள்வது மாதிரி எனக்கு வித்யா கர்வமோ, பெருமிதமோ கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் அப்டினு அதாவது தான் ஒரு ராஜானு நினைச்சுக்குற மாதிரி என்னை நினைச்சுக்கிறது கிடையாது. இயல்பாவே எனக்கு எந்த வித கர்வமும் கிடையாது. அது என்னோட இயல்பு.

-இவள் தேவதை பாரதி
உங்களுடைய ஆஸ்தான புகைப்படக் கலைஞர் இளவேனில் பத்தி சொல்லுங்களேன்.
மத்தவங்க படம் எடுத்தா ஒரு முகம் தான் வந்துட்டே இருக்கும். இவர் அப்டி இல்லை. கி.ராவுடைய பல முகங்களைக் கொண்டு வருவாரு. ஒரு படம் செய்தி சொல்லனும்னு விரும்புவாரு. படம்ங்றது இயக்கமா இருக்கனும்னு நினைக்கிறவரு.
கிரா- பேட்டி2009 ஹலோ fm